1 முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் பிற வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
ராஜஸ்தான் அரசு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்வின்றி அடுத்த வகுப்புக்கு அனுமதிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும், 10, 12 வாரிய தேர்வுகள் மே மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
ராஜஸ்தான் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவின்படி, 6, 7, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு, இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளன. 6 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் 2021 ஏப்ரல் 15 முதல் 22 வரை இறுதித் தேர்வுகளை எழுதுவார்கள். தேர்வுகள் பள்ளி அளவில் நடைபெறும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், ஏப்ரல் 23 அல்லது 24 தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
9, 11 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் 22 வரை மாவட்ட அளவில் நடைபெறும். 11 ஆம் வகுப்பு நடைமுறை தேர்வுகள் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6, 7, 9, மற்றும் 11 வகுப்புகளின் முடிவுகள் ஏப்ரல் 30க்குள் அறிவிக்கப்படும், அடுத்த உயர் வகுப்புகளுக்கான சேர்க்கை மே 1 ஆம் தேதி தொடங்கும்.