நிச்சயத்திற்கு தயாராகும் பார்வதி, விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் – ராஜா ராணி 2 ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது சந்தியாவின் பையில் இருந்து விவாகரத்து பத்திரம் கீழே விழுகிறது. அதை பார்த்து சரவணன் என்ன என கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சி ராஜா ராணி 2 சீரியலில், பார்வதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. பார்வதி கிளம்பிக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட்டனர். மாப்பிள்ளை காரில் வணக்கம் சொல்லி கொண்டே இறங்குகிறார். இந்நிலையில் சரவணனன் ரூமில் ஒரு மாதிரி நிற்க என்னாச்சு என சந்தியா கேட்கிறார். கொஞ்சம் பணம் இல்லாமல் இருக்கிறது என சொல்ல, உடனே சந்தியா தனது பையை எடுத்துவருகிறார்.
அதில் ஏற்கனவே இருந்த விவாகரத்து பத்திரம் கீழே விழுகிறது. அது பற்றி ஏற்கனவே சரவணனிற்கு தெரிந்திருந்தாலும், சந்தியாவிடம் உண்மையை சொல்ல வைக்க இது என்ன பத்திரம் என கேட்கிறார் சரவணன். அது ஒன்றுமில்லை என சொல்ல , நீங்களே சொல்றீங்களா இல்லை இதை கொண்டு போய் எல்லார் முன்னாடியும் பார்வதியிடம் கொடுத்து என்ன பத்திரம் என கேட்க சொல்லவா எனசொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!
உடனே பயந்து சந்தியா இது விவாகரத்து பத்திரம் என சொல்கிறார். அப்போ என்னிடம் உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா என கேட்டு சரவணனன் கோபப்படுகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் இது பற்றி பேசுவோம் என சரவணன் சொல்கிறார். சந்தியா என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார். இத்தனை நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்பம் வெளியாக உள்ளது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என வரப்போகும் எபிசோடில் பார்க்கலாம்.