சமையல் போட்டிக்கு தயாராகும் சந்தியா, உற்சாகப்படுத்தும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியாவை சிவகாமி ஆசீர்வாதம் செய்வதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். சரவணனும், சந்தியாவும் சமையல் போட்டிக்கு செல்கின்றனர். சரவணன், சந்தியாவை போட்டியில் ஜெயிக்க உற்சாகப்படுத்துகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவை, கோபத்தில் சாபம் விட்டதால் அதனை நினைத்து கவலைப்படுகிறார் சிவகாமி. கடவுளிடம் சந்தியாவை திட்டிவிட்டேன் ஆனால் அவளுக்கு எதுவும் நடக்க கூடாது என கவலைப்படுகிறார். பின்னர் சந்தியாவை அழைத்து ஆசிர்வாதம் செய்து வாழ்த்துகிறார். சிவகாமியின் இந்த நடவடிக்கையை நினைத்து சந்தியா மகிழ்ச்சி அடைகிறார்.
பின்னர், சமையல் போட்டிக்கு தயாராகமால் சந்தியா தூங்கி கொண்டிருக்க சரவணன் கிளம்பி ரெடி ஆகிறார். பின்னர் சந்தியா எழுந்து சரவணனிடம் தன்னை எழுப்பாத காரணத்தை கேட்கிறார். பின்னர் அர்ச்சனாவை வேகமாக வீட்டை துடைக்கும்படி சொல்கிறார் சிவகாமி, சமையல் போட்டிக்கு புறப்படும் நேரத்தில் வீடு துடைக்க கூடாது அதனால் சீக்கரம் துடைக்குமாறு கூறுகிறார்.
பின்னர் சமையல் போட்டிக்கு செல்ல சந்தியாவையும், சரவணனையும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கின்றனர். அங்கே சந்தியாவை ஜெயிக்க விடாமல் தடுக்க போட்டியாளர் ஒருவர் சந்தியாவை பதட்டமடைய செய்கிறார். அதில் இருந்து சரவணன் சந்தியாவை காப்பாற்றி தைரியம் கூறுகிறார். கட்டாயம் சமையல் போட்டியில் நீங்க ஜெயிப்பீங்க என்று உற்சாகப்படுத்தும் விதமாக பேசுகிறார். சந்தியாவும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொள்ள தயாராக உள்ளார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.