ரயில்வேயில் பணியாற்றும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் அஞ்சல் வாக்கு மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கத்தினர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை:
இதற்கு முன் 2021 ஜனவரியில் இந்திய தேர்தல் ஆணையம் ரயில்வே தொழிலாளர்கள், அத்தியாவசிய பணியில் இருப்போருக்கு அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கியது. அதனையடுத்து மார்ச் 19-ல் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகம், கேரளாவில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குரிமை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
அரசு வங்கியில் வேலை வேண்டுமா? இப்படி படிங்க – 100% தேர்ச்சி நிச்சயம்!
இது இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத வாக்குப்பதிவு பிரச்சாரத்திற்கு பின்னடைவு ஏற்படும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழக மற்றும் கேரளாவில் உள்ள ரயில்வே துறையில் பணியாற்ற ஊழியர்களுக்கு மட்டும் நிறுத்தி உள்ள அஞ்சல் வாக்கு பதிவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.