தினசரி மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக தினமும் மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது முடக்கம்:
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தினமும் 3.50 லட்சம் வரை நோய் பாதிப்பு மற்றும் 2 ஆயிரம் வரை உயிரிழப்பு பதிவாகிறது. நாடு முழுவதும் நோய் பாதிப்பில் மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. இந்த நோய் தாக்கத்தினால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குடன், வார இறுதியில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மருத்துவமனைகளில் நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆச்சிஜன் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நோய் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அஞ்சலகங்கள் பணி நேரம் குறைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
அம்மாநிலத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதை அடுத்து பஞ்சாப் மாநிலத்திலும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் மீண்டுமாக ஊரடங்கு நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தினமும் மாலை 6 மணிமுதல் காலை 5 மணி வரை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 11 மணி நேர ஊரடங்கு கொரோனாவுக்கு எதிராக மேலும் பலனளிக்கும் என பஞ்சாப் அரசு எதிர்பார்த்து வருகிறது.