பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடல் – அரசு உத்தரவு!!
புனேவில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்கள் மூடல்:
கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, புனேவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். முன்னதாக, புனேவில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மார்ச் 14 வரை மூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவின் தற்போதைய கொரோனா தொற்று பரவல் வேகத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகளை மூடுவது தற்போதைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு – ஏப்ரல் 19 இல் தொடக்கம்!!
புனேவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அனைத்து வகுப்புகளின் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொற்றுநோய் காரணமாக புனேவில் உள்ள பள்ளிகள் 2020 மார்ச் மாதம் மூடப்பட்டன, அன்றிலிருந்து நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புனே, மும்பை போன்ற நகரங்களில் திறக்கப்பட்டன, ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததால் அவை மீண்டும் மூடப்பட்டன. பின்னர் பிப்ரவரி 2021 முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிரா பள்ளிக்கல்வி அமைச்சர், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக மகாராஷ்டிராவில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு பல மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 8 மணி முதல் திங்கள் காலை 8 மணி வரை புனேவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.