1 முதல் பிளஸ்-2 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல் – கல்வித்துறை அறிவிப்பு!

0
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்

புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாக உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்:

புதுச்சேரியில் கடந்த 23ஆம் தேதி உடன் முழு ஆண்டு தேர்வு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து சிபிஎஸ்சி வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற உள்ள இந்த நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை 2 வாரங்களுக்கு முன்பே மேற்கொண்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்ட பெங்களூரில் இருந்து என்சிஇஆர்டி பாட புத்தகம் வாங்கப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.286க்கு விற்பனை – பொதுமக்களுக்கு ஷாக்!

இந்த புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்து சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வரும் 30ம் தேதி வரை இயங்க உள்ளது. அதன் பின் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!