புதுச்சேரியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஒட்டி இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை அமைதியுடன் நடத்துவதற்கு முன்னேற்பாடாக இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
ஏப்ரல் 6 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையின் 30 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி துவங்கவுள்ளது. முன்னதாக தேர்தல் காரணமாக புதுச்சேரியில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை சட்டம் ஒழுங்கோடு நடத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் தெரிவித்துள்ளதாவது, ‘புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன்னதாக, 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அமைதி, மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்க்கும் நோக்கில் 144 தடை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!
சட்ட விரோதமாக அரசியல் கட்சிகள் ஒன்று கூடுதல், கோஷங்கள் இடுதல், பதாகைகளை பிடித்தல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல், கம்புகள், ஆயுதங்கள், பேனர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் பிரச்சாரம் செய்வதோ, பொது ஊரடங்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறப்பு காரியங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை 42 கோடியே 12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருட்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்