பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.
இந்நிலையில் இன்று காலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் பல்கலைக்கழக முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் இன்டெர்னல் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெறுவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என புதுச்சேரி மாநில அரசு கூறியுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |