நெஞ்சுவலியால் அவதிப்படும் மூர்த்தி, பதறிப்போன ஜீவா & மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனையாகி கதிர் வீட்டை விட்டு சென்ற துயரத்தில் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. தற்போது மூர்த்தியை குடும்பத்தினர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார்கள். அதாவது எப்போதும் முல்லைக்கு பிரசவம் பார்த்த அந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை வைத்து குடும்பத்தில் சண்டைகள் வந்து கொண்டிருப்பதால் கதிர் கடுப்பாகிறார். இதற்கு மேலும் வீட்டில் நாம் இருக்கக் கூடாது என முல்லையை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!
எப்படியாவது இந்த ஐந்து லட்ச ரூபாய் கடனை வேறு ஏதாவது கடையில் வேலை பார்த்து நான் அடைத்து விடுவேன். ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்கும் வரைக்கும் இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன் என கூறி விட்டு கிளம்புகிறார். உடனே, மூர்த்தி நீ இந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் வீட்டிற்குள் வரவே முடியாது என கூறுகிறார். ஆனால் முல்லையை மட்டும் அழைத்துக் கொண்டு கதிர் வீட்டை விட்டு செல்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் கதிரை எவ்வளவு தடுத்தும் கதிர் கேட்பதாக இல்லை.
Exams Daily Mobile App Download
தன் தோள் மீது போட்டு வளர்த்த தம்பி வீட்டை விட்டு செல்கிறான் என்கிற மனவேதனையில் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மூர்த்தியை அழைத்துக்கொண்டு குடும்பத்தினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து முல்லையும் கதிரும் மூர்த்தியை பார்க்க வருவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ஏற்கனவே குடும்பத்திற்கு நிறைய கடன் இருக்கிறது. இந்த செலவை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.