திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதற்கும்’ கட்டுப்பாடு, பக்தர்களுக்கு ஏமாற்றம்!

0
திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு - 'இதற்கும்' கட்டுப்பாடு, பக்தர்களுக்கு ஏமாற்றம்!
திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு - 'இதற்கும்' கட்டுப்பாடு, பக்தர்களுக்கு ஏமாற்றம்!
திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதற்கும்’ கட்டுப்பாடு, பக்தர்களுக்கு ஏமாற்றம்!

திருப்பதி தேவஸ்தானம் தற்போது மீண்டும் பக்தர்களின் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகின்றனர். இதனால் வரலாறு காணாத அளவிற்கு திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருப்பதி லட்டு:

திருப்பதியில் ஏழுமைலையானை தரிசிப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். கடந்த இரண்டு வருடகாலமாக கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் அபாயம் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு சமீப காலமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால் தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிவைப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

அதிலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை உள்ளது. கடந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தேவஸ்தானத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது. இது தான் இதுவரை வசூல் ஆனதில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுவாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக 1 லட்டு கொடுக்கப்படும், அதை தவிர 1 லட்டு ரூ.50 வீதம் கூடுதலாக தங்கள் தேவைக்கு லட்டு வாங்கி கொள்ளலாம். ஆனால் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. காத்திருக்கும் அறைகள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி, அதன்பிறகு, 5 கி.மீ தூரம் வரையிலும் கூட்டம் நிற்கிறது. கிட்டத்தட்ட 48 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கபடுகிறது. இதனால் 1 பக்தருக்கு 1 இலவச லட்டும், கூடுதலாக கட்டணம் செலுத்தி 2 லட்டுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் கூடுதலாக கட்டணம் செலுத்தி லட்டு வாங்கிட நினைத்த பக்தர்களுக்கு ஏமாற்றம் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!