கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிவைப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
சீனாவில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வந்தது. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததனால் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து ஓரளவு கொரோனா பரவல் குறைந்ததுமே அடுத்தடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன. மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் குறைய துவங்கியதும் சீனாவில் பழையபடி படையெடுக்க ஆரம்பித்தது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
அதாவது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் என அனைத்துப் பகுதிகளிலும் எக்கச்சக்கமான மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்குள்ள கல்வி நிலையங்கள் என அனைத்து நிறுவனங்களும் முழுவதுமாக மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் துவங்கப்பட்டன. மேலும், அலுவலக பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணியை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனர். தற்போது வரைக்கும் சீனாவில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் பாடங்கள் கற்று வருகின்றன.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் பள்ளிகள் திறக்க திட்டமிட்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.