தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!

0
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 819 பேருக்கு பணிநியமன ஆணை!!
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 819 பேருக்கு பணிநியமன ஆணை!!
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் திருநின்றவூரில் தனியார் நிறுவங்களின் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட 819 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் ஜெயா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில், ரெனால்ட் நிசான், எம்.ஆர்.எப் வீல்ஸ் இந்தியா, மகேந்திரா, ஸ்ரீராம் உள்ளிட்ட 153-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!

இந்த முகாமில் ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, திருவள்ளூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,425 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு 819 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 256 பேர் 2-ம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் 3 பார்வையற்றவர்கள் உட்பட 77 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

பம்ப் ஆப்ரேட்டர்களுக்கான காலமுறை ஊதியம் – மாநாட்டில் தீர்மானம்!!

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவ ராவ், ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!