தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், ஒன்றியத் தலைப்பில் காலியாக உள்ள 3 (மூன்று) அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | கரூர் ஊராட்சி ஒன்றியம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 10.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கரூர் ஊராட்சி வயது வரம்பு:
தேர்வு செய்யப்படும் ஆண்டில் ஜூலை 1ம் தேதியன்று பொது பிரிவினர் 30 வயதுக்கு மிகையாகாமலும் MBC/BCபிரிவினருக்கு 32 வயதிற்கு மிகையாகாமலும் SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகையாகாமலும் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.
Office Assistant மாத ஊதியம்:
அலுவலக உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் ரூ.15700/- – ரூ. 50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கரூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
நான் எட்டு படித்து இருக்கேன்வேலைகிடைக்குமா