ரூ.5,000 கோடி PRIP திட்டம்:
Pharma, MedTech துறைக்கு புதிய வாய்ப்பு
இந்தியாவின் Pharma மற்றும் MedTech துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மத்திய மருந்துத் துறை PRIP திட்டத்தின் கீழ் 2-வது கட்ட விண்ணப்பங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு பயன்?
இந்தத் திட்டத்தின் மூலம் Startups, MSMEs மற்றும் பெரிய நிறுவனங்கள் புதிய மருந்துகள், Biosimilars மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிதியுதவி பெறலாம்.
ஆரம்பகட்ட திட்டங்களுக்கு ஒரு திட்டத்திற்கு ரூ.5 கோடி வரை, பின்னர் கட்ட திட்டங்களுக்கு ரூ.100 கோடி வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
PRIP திட்டத்திற்கான விண்ணப்பச் சமர்ப்பிப்பு செயல்முறை 2026 செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய தகவல்கள்
திட்டம்:
PRIP Scheme
முழுப் பெயர்:
Promotion of Research and Innovation in Pharma & MedTech
நிதி ஒதுக்கீடு:
ரூ.5,000 கோடி
அறிவித்த அமைச்சகம்:
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பயனாளிகள்:
Startups, MSMEs, Industry
ஆரம்பகட்ட நிதியுதவி:
ரூ.5 கோடி வரை
பின்னர் கட்ட நிதியுதவி:
ரூ.100 கோடி வரை
விண்ணப்பம் தொடக்கம்:
செப்டம்பர் 2026 நடுப்பகுதி



























