தமிழகத்திற்கு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி வருகை – இது தான் காரணம்? முழு விவரம்!
தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க அடுத்த மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடி
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 294 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த திட்டம், சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம்-செங்கோட்டை இடையே தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் இரண்டாவது ரயில் ஆகும். மேலும் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். அதுமட்டுமில்லாமல் சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நி்கழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download