சென்னையில் நாளை மறுநாள் (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை மறுநாள் அதாவது நவ.25 – ஆம் தேதி பராமரிப்பு காரணமாக சோழிங்கநல்லூர் பகுதியில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவித்துள்ளது
சென்னையில் மின்தடை
கடந்த சில நாட்களாக சென்னையில் அநேக இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அநேக இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும் , குறிப்பாக சாலைகளில் உலவி வரும் கால்நடைகள் ஆடு, மாடு கோழிகள் உயிர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது. மேலும் குழந்தைகளின் உயிர்களுக்கு கூட பெரும் ஆபத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் 1000+ தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை !
அனைத்து உயிர்களையும் காப்பாற்ற மின் கம்பிகள் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஏராளமான இடங்களில் மின் தடை போடப்பட்டு மின் பராமரிப்புக்காக வேலைகள் பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக நாளை மறுநாள் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் மின் பராமரிப்புக்காக வருகிற வியாழக்கிழமை அன்று மின்தடை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
கோவையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நவ.27 இல் நடைபெறும்!
இந்த மின் தடையானது பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூரில் தேவராஜ் நகர், அண்ணா தெரு , பூபதி நகர், வில்லேஜ் நெடுஞ்சாலை, ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, ஓ.எம்.ஆர் பகுதி , எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, அஞ்சல் அலுவலகம், கங்கையம்மன் கோயில் தெரு, ரிங்ரோடு பகுதி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.