Post Office PPF சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.12,500 முதலீடு, ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அஞ்சலகத்தில் வழங்கப்பட்டும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலம் முதலீட்டாளர் ரூ. 40 லட்சம் வரை பெற முடியும். இந்த சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சேமிப்பு திட்டம்:
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கி வருகிறது.
சென்னையில் நாளை மறுநாள் (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு இந்த திட்டம் பயன்படும். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் ரூ.12,500 முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் சில லட்சங்கள் வரை வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 1000+ தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை !
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதத்திற்கு ரூ 12,500 முதலீடு செய்பவர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் சுமார் ரூ 40 லட்சம் வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் உங்களின் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும், அதே நேரத்தில் முதலீட்டுக்கான வட்டி ரூ.18.18 லட்சமாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்திற்கு, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.