தமிழகத்தில் 1000+ தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை !
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, கலந்தாய்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை கருத்தில் கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் 1 முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களால் இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கோவையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நவ.27 இல் நடைபெறும்!
இதனால் ஆசிரியர்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 1000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மற்ற ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதிகமாகி கொண்டே செல்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பரவலால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை இதனால் பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு போன்றவைகள் நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர், தலைமை ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – வெளியானது புதிய 2 அம்சங்கள்!
இந்த பற்றாக்குறையால் பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. நிர்வாக பணிகளை செய்வதால் மாணவர்களுக்கு கற்பித்தலில் தடை ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் பதவி உயர்வு பணியிட மாறுதல் கலந்தாய்வு போன்றவைகளை நடித்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினர். மேலும் இரண்டு ஆண்டுகளும் மேல் கலந்தாய்வு நடைபெறாததால் ஓய்வு பெரும் நிலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.