கோவையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நவ.27 இல் நடைபெறும்!
கோவை நியூ சித்தாபுதூர் பாரதியார் சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 27ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் நாளுக்கு கல்லூரி படித்து வெளியில் வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயம் வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டன. இதன் காரணமாக பலரும் வேலை இழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – வெளியானது புதிய 2 அம்சங்கள்!
மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் ஆங்காங்கே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் திட்ட செயலாக்க அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வரும் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் தகுதியான மற்றும் திறமையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.
TCS, Microsoft, Ola Electric நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!
இந்த முகாமில் ஐ.டி, இண்டஸ்ட்ரீஸ், ஆட்டோமொபைல், கார்மென்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனை துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. 8ஆவது முதல் தொழில்நுட்பக் கல்வி பட்டயப் படிப்பு இளங்கலை மற்றும் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதில் கலந்து கொள்ள வருபவர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர பகுதி சான்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு முகமானது கோவை நியூ சித்தாபுதூர் பாரதியார் சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.