தமிழகத்தில் நாளை (ஜூலை 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலியில் திங்கட்கிழமை (ஜூலை 4) அன்று தாழையூத்து பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துகள் நேரிடும். அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
இவ்வாறு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் இப்பணியின் போது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை ஜூலை 4ல் திருநெல்வேலி மாவட்ட தாழையூத்து பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின் தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது திருநெல்வேலி நெல்லை கிராமப்புற மின்கோட்டத்துக்கு உட்பட்ட தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை 4ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மின் பராமரி பணி நிமித்தம் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளதாக நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.