தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ளது, இப்படி கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து உள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து முக கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய கோரிக்கை!
மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. மாநகராட்சியில், மே மாதம் முற்பகுதி வரை ஒரு நாள் கொரோனா பாதிப்பு சராசரியாக 40 என்ற எண்ணிக்கைக்கும் கீழ் பதிவாகி வந்தது. மாதத்தின் பிற்பகுதியில் மெல்ல, மெல்ல கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது..ஜூன் 1ம் தேதி 59 என்ற எண்ணிக்கையில் பதிவாக வந்த தொற்று 10-ம் தேதிக்கு பின் வேகமெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, நோய் பரவல் அதிகம் உள்ள சென்னை போன்ற மாவட்டங்களில், கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு, வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.