கோவை மாவட்டத்தில் நாளை (நவ.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12.11. 2021) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அணைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவுபெறும் வரி மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதன் மூலம் முன் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்னேற்பாடுகள் தீவிரம்!
மின் நிலையங்களில் மின் இணைப்பு கம்பிகள் வயர்கள் மாற்றப்பட்டு பாதுகாப்பான மின் விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் மின்கம்பங்களை சரி செய்ய மின்சாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மின் ஊழியர்கள் மழையால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளை மாவட்டம் தோறும் செய்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் திருமணமான அவரது மகளுக்கும் வேலை – மாநில அரசின் திட்டம்!
அதனை தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் எம்.ஜி.ஆர் ரோடு, காமராஜ் நகர், காமதேனு நகர், பாலசுந்தரம் தெரு, நவஇந்தியா ரோடு, தெற்கு வீதி, ஸ்ரீ வள்ளி நகர், ஆவாரம்பாளையம், இந்துஸ்தான் அவென்யு, பழனி ஆண்டவர் கோயில் வீதி, குமரன் நகர், காந்திநகர், கட்டபொம்மன் வீதி, கஸ்தூரிபாய் வீதி, கே.ஆர்.ஜி. நகர், மருதையா நகர், கே.கே. நகர், செக்கான் தோட்டம், வி. ஜி. ராவ் நகர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.