
BREAKING NEWS:மக்களே பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா..? ” விநியோகம் செய்யும் நாள் அறிவிச்சாச்சு”..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் பொங்கல் திருநாளானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 நாட்களுக்கு முன்னரே மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகையை தமிழக அரசு வழங்குவது உண்டு. ஆனால், 2025 ஆண்டிற்கான பொங்கல் திருநாளை கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தற்போது பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் நாள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 3ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் ஜனவரி 9 ம் தேதி முதல் தினசரி 200 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெறும் வகையில், ஜனவரி 3ம் தேதி முதல் வீடு வீடாக பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.























