பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு தேதி மாற்றம் – அதிகாரபூர்வ வெளியீடு !!!!
பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியினை மாற்றம் செய்துள்ளதாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு தேதி குறித்த விவரங்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.
இறுதி ஆண்டு தேர்வுகள் :
கொரோனா வைரஸ் தொற்றின் ஊரடங்கினால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாமல் போனதால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. இருப்பினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அந்த இறுதி செமஸ்ட்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. யுஜிசி விதிமுறைபடி செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
தேர்வு தேதி மாற்றம் :
முன்னதாக செப்டம்பர் 14 முதல் நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது செப் 21 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஆன்லைன்/ ஆஃப்லைன் முறையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Announcement
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்