
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மோடி அரசின் திட்டம்.. ஆண்டுக்கு நிதி உதவியாக மட்டும் இவ்வளவு கிடைக்குமா?..
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ஆனது விவசாயிகளை நம்பியே உள்ளது. மேலும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கவும் விவாசாயிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர். இந்நிலையில் மோடி அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது “பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம்” (PM KISAN) என்பது நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு தவணை முறையில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமானம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.12,000 வழங்கவுள்ளது.
இதை தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெற சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளின் பெயரில் சாகுபடி செய்யும் நிலம் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என்றும் விவசாயி வருமான வரி செலுத்துபவராக இருந்தால் இந்தத் திட்டத்தில் பயன் பெற முடியாது என புதிய விதிமுறைகள் கிசான் சம்மன் திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன.

























