PG NEET தேர்வுகள் 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக தற்போது மத்திய அரசு பிஜி நீட் (PG NEET) தேர்வினை ஒத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வினை ஏற்கனவே அரசு தள்ளி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு:
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா நோய் பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்த நோய் பரவல் சற்று குறைந்து இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் இந்த நோய் பரவல் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தாக்கத்தால் பாதிப்படைந்து வருகின்றனர். இப்படியாக இருக்கும் காரணத்தால், பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மே 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்து வருவதால், பிஜி.,க்கான நீட் தேர்வினை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பு தேர்வுகள் நடைபெறாது என்றும் கூறப்படுகிறது.
தேர்வு நடத்த திட்டமிட்டால் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுத்துள்ளது. இதன் மூலமாக கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ பல மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்