தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்க அனுமதி? தளர்வுகள் அளிக்க கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தினால் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளை எப்போது திறக்க அனுமதிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
திரையரங்குகளுக்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திரையரங்குகள், மால்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக செயல்பட்டு வரும் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திரையரங்குகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்.
தமிழக கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை திறப்பது பெரும் சிரமம் தான், மக்கள் வீடுகளிலேயே ஹோம் தியேட்டர் மூலமாக படம் பார்க்க பழகி விட்டனர். திரையரங்குகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தெரிவிக்கப்பட்டால் கூட மக்கள் அதனை சரியாக கடைபிடிக்கவில்லை. அதிலும், நண்பர்களாக, குடும்பமாகச் செல்பவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டால் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. கொரோனா பரவல் காரணமாக 50 சதவிகித இருக்கை தான் நிரப்ப வேண்டும் என்பதால் ஒரு சீட் விட்டு ஒரு சீட்தான் மக்கள் அமர வைக்கப்படுகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
மேலும் நடுத்தர குடும்பம் திரையரங்கு சென்று படம் பார்க்க குறைந்தது ரூ.1000 செலவாகும். ஓ.டி.டி-யில் 3 மாதத்துக்கு சேர்த்தே 329 ரூபாய்தான் செலவு. எனவே மக்கள் அதிகம் ஓ.டி.டி-யை விரும்புகின்றனர். இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறுகையில், ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு என்ன முடிவு செய்துள்ளது என பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.