தமிழக கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களின் உரிமை பத்திரங்கள் ஆவணங்கள் போன்றவை இணையத்தில் நாளை வெளியிடப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை:
தமிழகத்தில் ஏராளமான இந்து கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு கோயில்களும் உரிய அனுமதி பெற்று இயங்குகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 36,000 திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இடம் பெற்றுள்ள நிலங்களின் உரிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலங்கள் மூன்று விதங்களாக பிரிக்கப்படவுள்ளது.
E-vouchers மூலம் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசின் புதிய திட்டம்!!
அவை முழுவதும் ஒத்துப் போகும் நிலங்கள், பகுதியாக ஒத்துப்போகும் நிலங்கள் & புது இனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் தமிழ் நிலம் மென்பொருளோடு ஒப்பிடப்பவுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக நடந்த ஆராய்ச்சியில் 3,43,647 ஏக்கர் கோயில் நிலங்கள் தமிழ் நிலம் மென்பொருளோடு முழுவதும் ஒத்துப்போகும் நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் பதிவேடுகள், பட்டா மேலும் உரிய ஆவணங்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது ஒத்துப் போகும் நிலங்கள் மொத்த கோயில் நிலங்களில் 72 சதவீதமாகும். மேலும் பிற நிலங்களின் தகவல்கள் போன்றவை நாளை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில் நிலங்களின் பட்டா, “அ” பதிவேடு போன்றவற்றை திருக்கோயில் நிலங்கள் என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்கள் பற்றிய தகவல்களை பொது மக்கள் இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒத்துப் போகாத நிலங்களும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதை எந்த ஆப்பில் தேடிப் பார்க்க வேண்டும்…..
தமிழ் நாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் அனைத்தையும் பதிவிட்டு பார்வைக்கு அளித்து வருகிறது..இதனை முன்னின்று அமுலாக்க நடவடிக்கை எடுத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையாளர் திரு. ஜெ.குமரகுரு பரன், இ. ஆ ப.அவர்களுக்கும் நன்றி….