தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தற்போது இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதனால் பல்வேறு தரப்பினர் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஈட்டிய விடுப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்துடன் நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

இதற்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தடை நீடித்தது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அத்துடன் தற்போது 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்த ஊழியர்கள் 21 நாட்கள் வரை சிறப்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அந்த அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் மனைவி கருத்தடை செய்திருந்தால் 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதற்கு தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் இதனை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!