இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிய நிலையில் தற்போது ஓமைக்ரான் புதிய திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தலைநகரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான “ஓமைக்ரான்” தொற்று காரணமாக வேகமெடுக்க தொடங்கியது. அதனால் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – உத்தேச 11 அணி விபரம்!

அதனால் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலுமாக குறையத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இப்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அத்துடன் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து இப்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்.இ என்ற புதிய வகை வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!