மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பென்சன் தொகை உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பென்சன் தொகை உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பென்சன் தொகை உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பென்சன் தொகை உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஜாக்பாட் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விதிமுறையின் படி, இனி அதிக பென்சன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்சன் தொகை உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. இதனுடன் ஜனவரி 2022 முதல் மார்ச் 2022 வரையிலான டிஏ அரியர் தொகைக்கும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. முதல் திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரை இருக்கும். இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்துக்கு இருக்கும். ஜனவரி மாதத்திற்கான டிஏ திருத்தம் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான விதிமுறையும் மாற்றப்பட்டுள்ளது.

கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

சிசிஎஸ் பென்சன் 1972 விதி 54(11)ன் படி, கணவன்-மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்து விட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ExamsDaily Mobile App Download

1. மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதியம் (CCS pension) 1972-இன் கீழ் கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களின் ஓய்வுக்குப் பிறகு இருவரும் இறந்து விட்டால், அவர்களின் குழந்தைகள் (நாமினிகள்) இரண்டு பென்சன் தொகை பெறலாம். இந்த இரண்டு ஓய்வூதியத் தொகையும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சமாக இருக்க வேண்டும்.

2. பின்னர் அரசு ஊழியர் இறந்துவிட்டால், ஓய்வூதிய விதி 54 (3)-இன் கீழ் உயிருடன் இருக்கும் அவரது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.45,000 மட்டுமே கிடைத்தது. மேலும் இரண்டு குடும்ப ஓய்வூதியங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் துணை விதி (2)-இன் படி, இந்தத் தொகை ரூ.27,000 ஆக இருந்திருக்கும்.

3. தற்போது புதிய பென்சன் விதி படி, குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, பணி ஓய்வுக்கு பின் இருவரும் இறந்து விட்டால், நாமினி குழந்தைகளுக்கு ஓய்வூதியமாக, ரூ.1.25 லட்சமும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.75,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!