செப்.1 முதல் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விப்ரோ நிறுவனம்!
விப்ரோ நிறுவனம் தனது 80% பணியாளர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பள உயர்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு:
விப்ரோ நிறுவனம் நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2021 ஏப்ரல் 1 முதலான புதிய நிதியாண்டில் அதிகபட்ச சம்பள உயர்வை முதன்முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் அறிவித்துள்ளது. விப்ரோ வின் இந்த அறிவிப்பு அடுத்தபடியான பெரிய அறிவிப்பாகும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை – மக்கள் பாராட்டு!!
விப்ரோவின் பேண்ட் பி 3 நிலை ஊழியர்களான உதவி மேலாளர் மற்றும் அதற்குக் கீழே உள்ள 80 சதவீத ஊழியர்களுக்கு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தகுதி சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கான இரண்டாவது சம்பள உயர்வு இந்த அறிவிப்பாகும். பேண்ட் சி 1 நிலையில் உள்ள மேலாளர்கள் மற்றும் அதற்கு மேலான தகுதியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர் ஒற்றை இலக்கங்களிலும், ஆன்சைட் ஊழியர்களுக்கு இடைப்பட்ட ஒற்றை இலக்கங்களிலும் அதிகரிக்கும். சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.