தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை – மக்கள் பாராட்டு!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சேலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறார்.
ஆயிரம் ரூபாய் பரிசு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அமலில் உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபான கடைகள் திறப்பு மறு ஆய்வு – அரசுக்கு வலியுறுத்தல்!!
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், புத்தகப்பை, காலனி, மடிக்கணினி போன்றவை வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 இடஒதுக்கீடு போன்றவை வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த வரிசையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு தொகையாக ரூ.1000 வழங்குகிறார். தலைமை ஆசிரியரின் இச்செயல் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தலைமை ஆசிரியர் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கக்கூடிய நல் ஆசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.