முல்லையை அவமானப்படுத்தும் மல்லி, ஐஸ்வர்யாவின் புது தொழிலிற்கு அனுமதி கொடுத்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
முல்லையை அவமானப்படுத்தும் மல்லி, ஐஸ்வர்யாவின் புது தொழிலிற்கு அனுமதி கொடுத்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
முல்லையை அவமானப்படுத்தும் மல்லி, ஐஸ்வர்யாவின் புது தொழிலிற்கு அனுமதி கொடுத்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
முல்லையை அவமானப்படுத்தும் மல்லி, ஐஸ்வர்யாவின் புது தொழிலிற்கு அனுமதி கொடுத்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மல்லி முல்லையின் தொழிலை பற்றி அவமானப்படுத்தி பேச உடனே முல்லை வருத்தப்பட்டு அழுகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா வீட்டில் பார்லர் தொடங்க இருப்பதை அறிந்து தனமும், மூர்த்தியும் ஐஸ்வர்யாவை உற்சாகப்படுத்துகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மல்லியை முல்லை மதுரையில் வேற வேலையே இல்லையா என கேட்க உடனே மல்லி நீங்க உருப்புடாமல் போவதை நான் பார்க்க தான் போகிறேன் என சொல்கிறார். உடனே முல்லையின் அப்பா தேவை இல்லாமல் பேசாதே, அவங்க தான் எதோ நம்பிக்கையில் தொழில் தொடங்கி இருக்கிறார்கள் என சொல்ல, முல்லை அம்மா தெரியாத வேலையை செய்தால் அப்படி தான் நஷ்டம் ஏற்படும் என சொல்கிறார். பின் மல்லி மதுரைக்கு வாங்க வேலை போட்டு தருகிறேன் என சொல்ல, முல்லை எல்லாரும் பேசாமல் இருக்கீங்களா என அழுது கொண்டே உள்ளே செல்கிறார்.

பின் கதிர் வந்து முல்லைக்கு சமாதானம் செய்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் தொடங்கினால் எல்லா வேலைகளையும் நம்ம தான் பார்க்க வேண்டும் என மீனா நினைக்கிறார். பின் கண்ணன் வர அவரிடம் ஐஸ்வர்யா பார்லர் தொடங்க இருப்பது பற்றி சொல்கிறார். அவள் வேலைக்கு சென்றுவிட்டால் உன்னை யாரு பார்த்துக் கொள்வார், உன் வேலைகளை எல்லாம் நீ தான் செய்ய வேண்டும் என சொல்கிறார். உடனே கண்ணன் ஐஸ்வர்யா வேலை எல்லாம் செய்ய வேண்டாம் அதான் நான் வேலைக்கு போறேனே என சொல்ல, சரி என மீனா சொல்கிறார்

பின் கண்ணனும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யாவும் தனமும் வந்து தயக்கத்துடன் இருக்கிறார். தனம் யோசித்து சொல்லலாம் என சொல்ல ஐஸ்வர்யா இப்பவே பொருள் எடுக்க வேண்டும் அதனால் சொல்லுங்க என சொல்கிறார். பின் தனம் மூர்த்தியிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என சொல்ல, ஐஸ்வர்யா பியூட்டிசன் கோர்ஸ் படித்து இருக்கலாம் என சொல்கிறார். மூர்த்தி அப்படி என்றால் கல்யாண பெண்ணிற்கு பவுடர் போடுகிற வேலையா என கேட்க ஆமாம் என ஐஸ்வர்யா சொல்கிறார். மூர்த்தி அதற்கு படிப்பு எல்லாம் வந்துவிட்டதா என சொல்ல ஆமாம் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

ஐஸ்வர்யாவின் தோழி ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கிறாள் அந்த பொருள்களை கொடுப்பதாக சொல்ல, உடனே மூர்த்தி அதெல்லாம் நமக்கு எதற்கு என கேட்கிறார். வீட்டில் தான் தொடங்க போவதாக சொல்ல மூர்த்தி வீட்டில் ஆள் இல்லாத போது ஆம்பளைங்க எல்லாரும் வந்தால் என்ன செய்வது என கேட்கிறார். அதெல்லாம் சரியாக வராது என சொல்ல, தனம் முதலில் தெரிந்தவர்கள் தான் வர போறார்கள் என சொல்கிறார். மூர்த்தி எதற்கும் ஜீவாவிடம் கேட்கலாம் என சொல்ல தனம் சரி என சொல்கிறார். மறுபக்கம் கதிர் கடையில் இருக்க, மல்லி சாப்பாட்டை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முல்லை மதிய சாப்பாடு ரெடி செய்யலாமா என கேட்க, மல்லி காலை சாப்பாடே அப்படியே இருக்கிறது என சொல்கிறார். பின் கதிர் காலை சாப்பாடு இருந்தால் மதிய சாப்பாடு செய்ய கூடாதா என கேட்கிறார். மல்லி எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் இருக்கீங்க என கேட்க, முல்லை நீ அறிவுரை சொல்லும் அளவிற்கு இருந்தால் அதை உன்னுடன் வைத்துக் கொள் என சொல்கிறார். முல்லை அப்பா, மல்லியை உனக்கு என்ன என கேட்க உதவி செய்யாமல் இருந்தாலும் உபத்திரம் செய்யாமல் இரு என சொல்கிறார். முல்லை எத்தனை பேருக்கு சாப்பாடு செய்வது என கேட்க, கதிர் அளவு சொல்கிறார்.

விவகாரத்தை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, வீட்டு செலவை பார்க்கமாட்டேன் என சொன்ன செழியன் – இன்றைய எபிசோட்!

பின் காலை சாப்பாட்டை என்ன செய்வது என கேட்க, பக்கத்தில் முதியோர் சாப்பாடு இல்லாமல் இருப்பதாக சொல்கிறார். மல்லி நீங்களே பிச்சை எடுத்து கொண்டு இருக்கீங்க, ஏன் தானம் எல்லாம் பண்றீங்க என சொல்ல முல்லை, மல்லிக்கு சூடு வைத்துவிடுகிறார். பின் மல்லி கிளம்பிவிட, முல்லை ஸ்பெஷலாக குழம்பு வைக்க இருப்பதாக சொல்கிறார். கண்டிப்பாக எல்லாம் விற்றுவிடும் என முல்லை சொல்கிறார். கதிர் முல்லையை நினைத்து சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!