‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – குற்ற உணர்ச்சியில் தவிக்கும் கதிர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி சொல்வதை கேட்காமல் முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் வீட்டை விட்டுக் கிளம்புகிறார். கதிர் வீட்டை விட்டு கிளம்பியதால், வருத்தத்தில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வருகிறது. மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை அறிந்து கதிர் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.
பரபரப்பான ப்ரோமோ:
விஜய் தொலைக்காட்சியில், சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் கதைக்களம் , நான்கு சகோதரர்களின் ஒற்றுமை கொண்டுதான் நகர்கிறது. மேலும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளன. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாகவே முல்லை குழந்தை பிரச்சனை பற்றிய எபிசோடு தான் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முல்லைக்கு ட்ரீட்மென்ட் செய்தால் குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொன்னதன் பேரில், மருத்துவ செலவிற்காக அதிக கடன் வாங்கினார். இருப்பினும் ட்ரீட்மென்ட் தோல்வியை தழுவியது.
விவாகரத்து விஷயத்தில் அடம்பிடிக்கும் ஹேமா, ஒத்துக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த திருப்பம்!
இதையடுத்து தனத்தின் பிறந்தநாளிற்காக வந்த உறவினர் மத்தியில் கடும் பிரச்சனை எழுந்தது, மீனாவின் அப்பாவும் கதிரை மரியாதைக் குறைவாகப் பேசியதால் கதிர் முல்லை ரீட்மென்ட்க்கு வாங்கிய கடனைக் கட்டாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று முல்லையை கூட்டிக் கொண்டு கிளம்பி விடுகின்றார். மேலும் கதிர் வீட்டை விட்டு சென்ற காரணத்தால் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூர்த்தியைப் பார்க்க வந்த கதிரிடம் தனம் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுகின்றார். ஆனால் கதிரோ, நான் கடனை காட்டாமல் வீட்டிற்குள் வரமாட்டேன் என மறுத்து விடுகிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் கோபம் அடைந்த, தனம் கதிரை, ஹாஸ்ப்பிடலை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். மேலும் கதிர் பார்மசியில் பணம் கட்டி , பில் வாங்குகிறார். இதை பார்த்து தனம் கோபமடைந்து , ஜீவா, கண்ணா நீங்க ரெண்டு பெரும் என்ன பண்றீங்க, அவன் எதுக்கு பில் வாங்குறான் என சத்தம் போடுகிறார்.அவன் சுமரியாதை உள்ளவன் , நம்ம வீட்டுக்கு தான் வரமாட்டேன்னு சொல்லிட்டான்ல, அப்புறம் எதுக்கு இவன் இதெல்லாம் செய்யணும் என சொலிக்கிறார்.மேலும் டாக்டர் , மூர்த்திக்கு இனி ஒன்றும் இல்லை, 2 மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறுகிறார். இதை கேட்டு தனம் அழுகிறார். இதெல்லாம் பார்த்து கொண்டு இருந்த கதிர் தன்னால்தான் அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சு என குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அப்போது ஜீவா , நீ அண்ணா கிட்ட போய் பேசு எல்லா நல்ல சரியாகிவிடும் என கூறுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.