TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – எளிமையாக வெற்றி பெறுவது எப்படி?
குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருப்பதால் பலரும் தேர்வு குறித்தான பயத்தில் இருக்கின்றனர். தற்போது எளிமையாக குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, குரூப் 2 முதலான தகுதி தேர்வு நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குரூப் 4 தேர்விற்கு மட்டுமே மொத்தமாக 7 ஆயிரத்து 382 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த 7382 காலிப்பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்!
குரூப்-4 தேர்வில் எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியான தமிழ்மொழி தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். 100 வினாக்களில் குறைந்தபட்சமாக 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே வினாத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். இரண்டாவது நாளான பொதுஅறிவு பகுதிகளில் இருந்தும் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறித் தேர்வு வினாக்களும் இடம்பெறும். அதாவது பொது அறிவியல் பகுதியில் அறிவியல் நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திருவிழாக்கள் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
Exams Daily Mobile App Download
குரூப்-4 தேர்வுக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால் எளிமையான முறையில் தயாராவது எப்படி என்பது குறித்தான தகவலை இங்கு காணலாம். முக்கியமாக தமிழ் மற்றும் கணித பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து விட்டாலே குரூப்-4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம். தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். மீதமுள்ள அனைத்துப் பகுதிக்கும் அதவத்தகு கணிதத்திற்கு ஒரு மணி நேரமும், 4 முதல் 6 மணி நேரம் வரைக்கும் பொதுஅறிவு பகுதிக்கு ஒதுக்கி படித்து விட்டாலே பெரும்பாலும் குரூப்-4 தேர்வில் இடம்பெறும் அனைத்து வினாக்களுக்கும் எளிமையாக விடை அளித்து விடலாம். மேலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை தவறாமல் தெளிவாக படித்து கொள்ள வேண்டும். அதிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். படித்த பாடத் திட்டங்களை அவ்வப்போது திருப்பி ஞாபகத்தில் இருக்கிறதா என்பதனை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.