விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ‘மூர்த்தி’ வீட்டில் நடந்த சோகம் – ரசிகர்கள் இரங்கல்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருபவர் ஸ்டாலின் முத்து, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு துயர சம்பவம் குறித்த போஸ்டரை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
துயர சம்பவம்:
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் நாளுக்கு நாள் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் அண்ணன் தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்பம் என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கதை சீரியலில் வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!
இந்த தொடரில் மூத்த அண்ணனாக, மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின் முத்து. அவரது இயல்பான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடங்கி 3 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. மேலும் இந்த தொடர் தான் ஸ்டாலின் முத்துவை உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது.
ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – ரசிகர்கள் விமர்சனம்!
மேலும் ஸ்டாலின் முத்து சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் ஸ்டாலின் முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அப்பதிவு என்னவென்றால் அவரது வீட்டில் நடந்த துக்க சம்பவம் குறித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்து இருக்கிறார். ஸ்டாலின் முத்து உடைய பெரியம்மா ராஜம்மாள் 9ம் தேதி காலம் ஆகி இருக்கிறார். இதை தான் ஸ்டாலின் முத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.