“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – இணையத்தில் வைரல்!
விஜய் டிவியில் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தினை பிடித்து இருக்கும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலின் லேட்டஸ்ட் எபிசோட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாகவும் அதே சமயம் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் தன்மையினை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இந்த சீரியலில் யாருமே எதிர்பாராத வண்ணமாக கண்ணன் தனது உறவினர் பெண்ணான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர்.
‘லட்சுமி என் குழந்தை தான்’, பாரதியிடம் உண்மையை கூறிய கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!
இதனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். ஆனால், கதிர் மற்றும் ஜீவா இருவரும் அவருக்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். இதனை மூர்த்திக்கு தெரியாமல் பார்த்து கொள்கின்றனர். இப்படியாக இருக்க, கண்ணனை நினைத்து ஒரு பக்கம் அவரது அம்மா லட்சுமி மிகவும் வருந்துகிறார். அவனை நன்றாக பார்த்து கொள்ளும்படி மூர்த்தியிடம் பேசினால் அவர் எரிந்து விழுகிறார். இதனால் அவரது உடல்நலன் பாதிப்படைகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்த சீரியலின் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் லேட்டஸ்ட் எபிசோட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், கூடிய விரைவில் லட்சுமி உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு அவர் கவலைக்கிடமாக மாறலாம் என்பது தான் அது. டிஆர்பி ரேட்டிங்கில் 4ம் இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னிலை அடைய இது போன்ற காட்சிகள் இடம் பெறலாம் என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது.