இரட்டை கருவை சுமந்து கொண்டிருக்கும் முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குஷியில் ரசிகர்கள்!
முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் முல்லைக்கு இரட்டை குழந்தை உருவாகுவது போல ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. செயற்கை முறையில் முல்லை குழந்தையை பெற்றெடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் தெரிவிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
ஆனால், செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். ஆனால் மீனா அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கூறி சண்டை போடுகிறார். மீனா பேசியது முல்லைக்கு கவலையாக இருந்தாலும் குழந்தை வேண்டும் என்பதற்காக அனைத்தையுமே காதில் வாங்காத மாதிரி முல்லை இருக்கிறார்.
தமிழகத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 22 நேர்முகத்தேர்வு!
பின்பு மருத்துவர் செயற்கையாக கருமுட்டையை வயிற்றில் வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு தான் குழந்தை வளருகிறதா என்பதை பார்க்க முடியும் என கூறிவிடுகிறார். அதே நேரத்தில் உடலையும் மனதையும் தைரியமாக வைத்து கொள்ள வேண்டும் மற்றும் மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ள கூடாது என கூறுகிறார். இதற்கு பிறகு முல்லைக்கு இரட்டை குழந்தை உருவாகுவது போல ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.