8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ரூ.62,000/- வரை ஊதியம்..!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Driver, Office Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் முழு விவரங்களும் எளிமையாக இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) |
பணியின் பெயர் | Driver, Office Assistant |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Driver – 1
- Office Assistant – 9
Driver, OA கல்வி தகுதி:
Driver, Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் Driving License வைத்திருக்க வேண்டும் மற்றும் நல்ல உடற்தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
Driver, OA வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC / ST – 05 ஆண்டுகள், MBC / DNC / BC – 02 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TNHRCE ஊதிய விவரம்:
- Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 8 படி குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 1 படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
TNHRCE தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.04.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.