‘கண்ணனாக மாறி தான் அந்த சீனில் நடித்தேன்’ – மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். அவர் சீரியலுக்காக மொட்டை போட்டிருக்கும் நிலையில், என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதால் எனக்கு எதுவும் தெரியவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா இறந்ததை பார்க்க முடியாத கண்ணன் மொட்டை அடித்து இறுதி காரியம் செய்வது போல கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் கண்ணன் மொட்டை அடித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக இதை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா மகன் பிறந்தநாள் விழாவில் சீரியல் பிரபலங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!
வீட்டில் எப்படி ஒத்துக் கொண்டார்கள் என கேள்வி எழுப்பிய நிலையில் சுத்தமாக வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. வேண்டவே வேண்டாம் என அழுததாக தெரிவிக்கிறார். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த வேண்டும் என அவங்களை ஒத்துக் கொள்ள வைத்தேன் என தெரிவித்தார். மேலும், அப்பா அந்த சீன டிவியில் பார்க்கும் போது பயங்கரமாக அழுதார் என தெரிவித்துள்ளார். அண்ணன் அடிக்கும் காட்சி வந்தால் கூட அம்மா அழுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பின் லட்சுமி அம்மா பற்றி கேட்கப்பட்டது.
அதில் அம்மா எல்லாத்துக்கும் முடியாது என சொல்லாமல் நடித்தார். நானே நிஜமாகவே அம்மாவிடம் பேசவில்லை என தெரிவிக்கிறார். அவர்களிடம் சிரித்து பேசிவிட்டால் நடிக்க முடியாது என பேசவே இல்லை. கடைசி சீன் நடக்கும் போது கூட அவங்களிடம் பேச முடியவில்லை என தெரிவித்துள்ளார். ஒரே வீட்டில் இருந்து விட்டு அப்பறம் இல்லை என்றால் மிகவும் கவலையாக இருந்தது என உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார். இன்னும் 6 மாதங்களுக்கு மொட்டையாக தான் இருக்க வேண்டும் என சொன்னது தான் கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன் “ராஜா ராணி 2” ப்ரோமோ – விஜய் டிவி ரிலீஸ்!
இத்தனை நாட்களாக எனக்கு சரியாக டயலாக் கிடைக்கவில்லை. தற்போது தான் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கு அதை நான் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன், அம்மா இறந்தது போல நடித்தது எல்லாம் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தது என சொல்கிறார். அந்த சீனில் நான் சரவண விக்ரமை விட நான் கண்ணனாக மாறி தான் நடித்தேன் என சொல்கிறார். நெருப்பில் விழ சொன்னால் கூட நான் விழுந்திருப்பேன் என அவர் சொல்கிறார்.