ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதை இணைப்பதற்கான காலக்கெடுவும் தற்போது முடிந்து விட்டது. பலர் இணைக்காத நிலையில் சிலர் இணைக்க வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
பான்-ஆதாரை இணைக்கத் தேவையில்லை:
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பான் கார்டை நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க அரசு பல காலக்கெடுவை வழங்கியுள்ளது. அதன் காலக்கெடு இப்போது முடிந்துவிட்டது.
ICMR-NIRRCH தேசிய நிறுவனத்தில் மாதம் ரூ.78,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
வருமான வரிச் சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்தியக் குடியுரிமை இல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், பான் கார்டை இணைக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள், அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.