நியாயம் கேட்க செல்லும் பாக்கியா, திட்டி வெளியே அனுப்பும் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லி மொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுத்துவிட்டார் பாக்கியா. இதையடுத்து பாக்கியாவும், செல்வியும் ராதிகா வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு பாக்கியவிற்கு நியாயம் கிடைக்குமா, இல்லை சண்டை பெரிதாகுமா என பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் வைட்டிங்கில் உள்ளனர்.
அடுத்த ட்விஸ்ட்:
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் உச்ச கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த சீரியலில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தபோது மனைவி என்று கூறி ராதிகா பார்க்க சென்றதோடு, ராதிகாவும் கோபியும் பேசிகொண்டிருந்ததைப் பார்த்து பாக்கியா இடி விழுந்தவர் போல உடைந்து போகிறார். மேலும் பாக்கியா கோபியின் உண்மையான முகத்தை குடும்பத்தினரின் முன் அம்பலப்படுத்துகிறார். இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியது. மேலும் குடும்பத்தில் அனைவரும் மாறி மாறி கேள்வி கேட்க, ஒன்றுமே தெரியாதது போல் கோபி நடித்தார்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து கோபியின் துரோகத்தை தாங்க முடியாமல் பாக்கியா, தனக்காக ஒரு முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மேலும் பாக்கியா இந்த சம்பவத்தால் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவோரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அந்த இடத்தில் சீரியல் இயக்குனர் ட்விஸ்ட் வைத்துள்ளார். பாக்கியா தன்னம்பிக்கையோடு தான் நடத்தும் கேட்டரிங் நிறுவன அலுவலகத்திற்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து மறுநாள் பாக்கியா கடும் கோபத்துடன் ராதிகாவிடம் நியாயம் கேட்க செல்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்த ப்ரோமோவில் பாக்கியா, ராதிகாவிடம் நீங்களும் எனக்கு துரோகம் பண்ணிட்டிங்களா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா அழுதுகொண்டே, கோபி உங்க கணவர் என்று எனக்கு தெரியாது டீச்சர் என்று கதறுகிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கும்? ராதிகா சொல்வது பொய் என்று நினைத்து பாக்கியா ராதிகாவிடம் சண்டை போடுவாரா, இதனால் கோபமடைந்த ராதிகா பாக்கியாவை வெளியே அனுப்புவாரா? அப்போது ராதிகாவின் அம்மா வந்து ராதிகாவும் கோபியும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பாங்க என்று சொல்லி வாக்குவாதம் பெரிதாகுமா ? இந்த மாதிரி பல கேள்விகளுடன் ரசிகர்கள் இனி வரும் எபிசோடுகளுக்காக காத்துகொண்டு உள்ளனர்.