குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கும் பாரதி & கண்ணம்மா – அடுத்தது என்ன நிகழும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கும் பாரதி & கண்ணம்மா - அடுத்தது என்ன நிகழும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கும் பாரதி & கண்ணம்மா - அடுத்தது என்ன நிகழும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கும் பாரதி & கண்ணம்மா – அடுத்தது என்ன நிகழும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்கள் இணைந்து மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் சீரியல் கதைக்களமானது அதிக சுவாரஸ்யமாக அமையும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

மகா சங்கமம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பு குறைந்த நிலையில் கதைக்களம் நகர்ந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா, மற்றும் ராஜா ராணி சீரியல் இணைந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் கதை மிகுந்த எதிர்பார்ப்புடன் நகர்கிறது. பாரதி, கண்ணம்மா, சந்தியா, சரவணன் நான்கு நன்கு பேரும் சாமியாரை சந்தித்து பேசுகின்றனர். அப்போது சாமியார் நகையை திருடியது நீங்க தான் நகை உங்களிடம் தான் இருக்கிறது அதை என்னிடம் கொடுத்து விட்டு கேஸை வாபஸ் வாங்குமாரு கூறுகிறார். இதை கேட்ட நான்கு பேரும் என்ன நடந்தாலும் பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்புகின்றனர்.

Exams Daily Mobile App Download

சரவணனும் சந்தியாவும் பாரதி கண்ணம்மாவை அவர்கள் வீட்டில் தங்குமாறு அழைக்கின்றனர். ஆனால் பாரதியும் கண்ணம்மாவும் நாங்கள் ஹோட்டலில் தங்க போகிறோம் காலையில் உங்க வீட்டிற்கு வருகிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். இந்த பக்கம் வெண்பா தொலைக்காட்சி சேனலில் செய்தியில் கண்ணம்மா நகை திருடியதாக வெளியான செய்தியை பார்த்து சந்தோஷத்தில் ரோஹித்தை கூப்பிட்டு விஷயத்தை கூறுகிறாள். உடனே ரோஹித் வெண்பாவுடன் கூட பாரதி மாமாவும் இரண்டு குழந்தைகளும் போயிருக்காங்க கிட்டத்தட்ட ஹனிமூன் மாதிரி போயிருக்காங்க என்று சொல்ல இதை கேட்ட வெண்பா கடுப்பாகிறாள்.

புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களுடன்!

மற்றொருபக்கம் சிவகாமி, ஊரில் அனைவர் முன்னாடியும் என் மானமே போச்சு. என்ன போய் திருடின்னு சொல்லிட்டாங்கனு புலம்புகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் என்று சொல்லி சந்தியாவையும் சரவணனையும் பார்த்து கை நீட்டுகிறார். நீதி நேர்மைனு பேசி இப்படி சாமி குத்ததுக்கு ஆளாகிட்டீங்க இதனால் நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் தான் என்று சொல்லி அர்ச்சனா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் சந்தியாவை குத்தம் சொல்கின்றனர். பிறகு என்ன கொஞ்சம் தனியா விடுங்க என்று சொல்லி சிவகாமி ரூமுக்குள் செல்கிறாள். சந்தியாவும் அழுது கொண்டே உள்ளே செல்கிறாள். இந்த பக்கம் பாரதியும் கண்ணம்மாவும் ஹோட்டலில் சென்று ரூம் கேட்க உங்க பேரில் ரூம் எதுவும் புக் ஆகவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது. எல்லோரும் சாமியாருக்கு சாதகமாக இருப்பதை புரிந்து கொண்ட இருவரும் சந்தியா வீட்டிற்கு செல்ல முடிவு செய்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!