கள்ளக்குறிச்சி விவகாரம்: அடுத்ததடுத்து மாற்றப்படும் அதிகாரிகள் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் தற்போதைய ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த இடமாற்றம் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக இருக்கலாம் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் உளவுத்துறை ஐஜியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது குறித்து செய்தியினை இப்பதிவில் காண்போம்.
அதிகாரிகள் இடமாற்றம்:
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி கடந்த 13ம் தேதி பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஸ்ரீமதியின் பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டம் கலவரமாக வெடித்தது.
Exams Daily Mobile App Download
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு நேரில் விரைந்தார். பின்னர் காவலர்கள் துணையோடு போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் 144 தடை உத்தரவு அமல்படுத்துமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போதய ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதார் கார்டில் ஆன்லைன் மூலமாக முகவரியை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐஜி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது உளவுத்துறை ஐஜி யாக செந்தில்நாதனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திருவல்லிக்கேணி காவல் துறை இணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில உரிமைகள் ஆணைய எஸ்.பி யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் போராட்டம்,கலவரம் குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்றும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.