ரஷ்யாவின் உதவியை நாடிய பாகிஸ்தான்.. பஹல்காம் தாக்குதல் குறித்த பதற்றங்களை தணிக்க வேண்டுகோள்..!!
2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானதாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தியது. எனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
B.E / B. Tech தேர்ச்சி பெற்றவரா? ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றங்களை தணிக்க ரஷ்யாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, “இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இருக்கும் ரஷ்யா, இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


























