தமிழகத்தில் உள்ள ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறப்பு – இன்று முதல் அனுமதி!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதனை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது.அதன் காரணமாக மே மாதம் முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்!
இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றனர். அதன்படி புதுச்சேரியை தவிர மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு போக்குவரத்து இயங்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள் ,அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கட்சிக் கூட்டங்கள், பொழுதுபோக்கு ,விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவிகித மாணவர்களுடன் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.