தமிழக அரசு தீபாவளி சிறப்பு பேருந்துகள் பயணச்சீட்டு முன்பதிவு – அக்.4 முதல் ஆன்லைனில் தொடக்கம்!
தமிழகத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை முதல் ஆன்லைனில் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சிறப்பு பேருந்து
நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வர இருப்பதால் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மொத்தமாக விடுமுறை எடுத்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்ற நிலையில் மக்கள் இருக்கின்றனர். இதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Digital Voter ID – வாக்காளர் அடைய அட்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
அந்த வகையில் தற்போது நாளை முதல் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவினை செய்து கொள்ளலாம். கடந்த வருடம் சென்னைக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்களின் நலனிற்காக இயக்கப்பட்டன.
தமிழ்நாடு கருவூல அலுவலக உதவியாளர், தட்டச்சர், காசாளர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
வரும் அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் பேருந்துகளை இயக்கலாமா? என்பது போன்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் ஆர்வம் மற்றும் தேவைகளை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், செங்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.