தமிழ்நாடு கருவூல அலுவலக உதவியாளர், தட்டச்சர், காசாளர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.
அரசு காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. அரசு துறைகளில் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம் மற்றும் மருத்துவ துறைகளில் உள்ள காலிப்பணியிட விபரங்கள் வெளியிடப்பட்டன. மேலும் இம்மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விஏஓ, குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
அதனை தொடர்ந்து கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூடுதல் கருவூல அலுவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. இதன் மூலம் பதவி உயர்வு வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் ஏற்கனவே உள்ள காசாளர், கணக்கர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் நாளை (அக்.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதுமட்டுமின்றி புதிதாக அறிவிக்கப்படும் வட்டங்களில் சார்நிலை அலுவலகங்களை புதிதாக தோற்றுவிக்க வேண்டும். அசிஸ்டென்ட் புரோக்ராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசிடம் கோரப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.